Published : 01 Dec 2015 10:52 AM
Last Updated : 01 Dec 2015 10:52 AM

அதிகாரத்தின் கோர முகம்

ஹரியானா மாநில சுகாதாரத் துறை அமைச்சர் அனில் விஜ், மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் ஐபிஎஸ் அதிகாரி சங்கீதாவைக் கூட்டத்தை விட்டு வெளியேறச் சொல்லி கட்டளையிட்டதும், அவர் வெளியேற மறுத்ததால் தானே கூட்டத்தை விட்டு வெளியேறியது கண்டனத்துக்கு உரியது.

அத்தோடு நில்லாமல் ஐபிஎஸ் சங்கீதாவை பாஜக அரசு இடமாற்றம் செய்திருப்பது மேலும் அதிர்ச்சி அளித்துள்ளது. ஒரு அரசு அதிகாரியை அதுவும் கண்ணியமாக நடத்த வேண்டிய பெண் அதிகாரி யைப் பல அதிகாரிகள் மத்தியில் ஒரு அமைச்சர் அவமானப்படுத்தியது கண்டிக்கத்தக்கது.

தங்கள் சுயநலத்துக்காக அமைச்சர்கள் முன்னால் கூழைக் கும்பிடு போடும் அதிகாரிகள் மத்தியில், அஞ்சாமல் தனது நிலையில் உறுதியாக நின்ற ஐபிஎஸ் அதிகாரி சங்கீதா பாராட்டுக்குரியவர்.

- கே.பி.எச். முகம்மது முஸ்தபா,திருநெல்வேலி.









FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x