Published : 18 Nov 2015 10:50 AM
Last Updated : 18 Nov 2015 10:50 AM

வாக்களித்தவர்கள் வீதியில்

`கொல்வது மழை அல்ல’ கட்டுரை மிக அருமை. ஒடிஷா முதல்வர் புயலுக்கு முன்பே முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்ததால் பாய்லின் புயலால் அம்மாநிலத்துக்கு உயிரிழப்பும், பொருட் சேதமும் அதிகம் இல்லாமல் போனதாகக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒடிஷா முதல்வரை மட்டுமல்ல எல்லா மாநில முதல்வர்களையும் மக்கள்தானே தேர்தலில் வாக்களித்து வெற்றிபெற வைத்து ஆட்சியில் அமர்த்தியுள்ளார்கள். ஆனால் நம் ஊரில் வாக்களிக்கும் போதும், வாக்களித்த பின்னும் மக்கள் வீதியில்தான் நிற்கிறார்கள். இயற்கையைக் குற்றம் சாட்ட முடியாது. மழைக்காலத்தில் மழை பெய்யத்தான் வேண்டும். ஒரளவுக்கு மேல் மக்களையும் குற்றவாளிகளாக்க முடியாது.

தனது குடும்பத்தினரையும், தனது வசிப்பிடத்தையும் மட்டுமே அவரவர்கள் சரி செய்து வைத்துக்கொள்ள முடியும். ஆட்சியாளர்கள்தான் இவற்றைச் சரிசெய்ய வேண்டும். மழைக் காலத்துக்கு முன்பே முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காமல் மழை வந்த பின்பு எடுக்கும் நடவடிக்கைகள் மழைநீரில் கலந்தே வீணாகின்றன.

- நன்னிலம் இளங்கோவன், மயிலாடுதுறை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x