Published : 02 Nov 2015 12:16 PM
Last Updated : 02 Nov 2015 12:16 PM

பயம் கவ்வுகிறது

‘சோட்டா ராஜன்கள் வளர்வதைத் தடுக்க என்ன வழி?’ தலையங்கம் காவல் துறையின் ஒட்டுமொத்தப் பலவீனத்தையும் வெட்டவெளிச்சமாக்குகிறது.

குற்றவாளி தனது உதவியாளர்கள் மூலம் காவல் துறையினரிடம் தொடர்புகொண்டிருந்தார் என்பதை அறியும்போது நம்மை அறியாமலே பயம் நம்மைப் பற்றிக்கொள்கிறது. மும்பை போலீஸாரின் முறையற்ற சில செயல்கள் மறைக்கப்படுவதற்கான வேலையால்தான் ஷாஹித் ஆஸ்மி என்ற வழக்கறிஞரின் கொலை மறைக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.

போலி பாஸ்போர்ட் மூலம் இந்தியர்கள் வெளிநாட்டில் வாழ்கிறார்கள் என்பது நமது நிர்வாகத்தின் குறையே.

-எஸ். சொக்கலிங்கம், கொட்டாரம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x