Published : 13 Nov 2015 09:57 AM
Last Updated : 13 Nov 2015 09:57 AM

அசோகருக்கு சாதி இல்லை!

ஒரு குறிப்பிட்ட சாதியினரின் வாக்குகளைக் கவர இப்படியும் செய்வார்களா எனும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது, `அசோகருக்கு இதுவா அடையாளம்’ கட்டுரை. அரசியலில் சாதி புகுந்தது நம்நாட்டுக்குக் கொடுக்கப்பட்ட சாபம் என்றே தோன்றுகிறது. “ஒரு நாட்டில் எல்லாவித மதத்தாரும் சம உரிமையுடன் வாழ உரிமை உண்டு, மற்றும் ஒருவர் தன் மதக் கொள்கைகளையும் நம்பிக்கைகளையும் நன்கு கற்று மற்ற மதத்தவரை மதித்து நடக்க வேண்டும்” என்ற கொள்கையோடு நீதி தவறாமல் ஆட்சி செய்த மாமன்னன் அசோகர் ஒரு குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்தவர் என்று சொல்லி பா.ஜ.க. பிஹார் தேர்தல் பிரச்சாரம் செய்தது மிகவும் கண்டிக்கத்தக்கது.

ஒருவர் தன் மதத்தை நன்கு கற்றுணர்ந்தால் மற்ற மதத்தை நிந்திக்க மாட்டார். என்ற அசோகரின் அறிவுரை மோடிக்கு மட்டுமல்ல, ஒவ்வொரு தனிமனிதனுக்கும் தேவையான அறிவுரையாகும். மாமன்னர் அசோகரைப் பற்றி மக்களுக்கு தெரியாத பல தகவல்கள் இந்து நாளிதழ் மூலம் மக்களுக்குத் தெரியவந்திருக்கிறது.

கே.பி.எச்.முகம்மது முஸ்தபா, திருநெல்வேலி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x