Published : 27 Nov 2015 11:07 AM
Last Updated : 27 Nov 2015 11:07 AM

அறப்பணி!

மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் கடலூர் மாவட்ட மக்களுக்கு 'தி இந்து' நாளிதழ் செய்துவரும் உதவிகள் பாராட்டத்தக்கவை. உதவும் எண்ணம் கொண்ட வாசகர்களையும் நிறுவனங்களையும் ஒன்றிணைத்து, இத்தகைய நிவாரணப் பணிகளை மேற்கொள்வது நல்ல விஷயம். செய்திகள் மற்றும் கட்டுரைகளைச் சிறந்த முறையில் வெளியிடுவதோடு பேரழிவு நிகழ்வுகளின்போது, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ ஊடகங்கள் முன்வருவது காலத்தின் தேவை.

அதேபோல், உதவிக்கரம் நீட்டும்படி வேண்டுகோள் விடுத்ததை ஏற்று, வாசகர்கள் காட்டும் பேராதரவும் பாராட்டத் தக்கது.இந்த அறப் பணியின் மூலம் பயனடைந்திருப்போர் நன்றிப்பெருக்குடன் கூறும் உணர்வுபூர்வமான வார்த்தைகள், மனதைத்தொடுகின்றன.

- தா. சாமுவேல் லாரன்ஸ், மதுரை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x