Published : 14 Mar 2021 03:14 AM
Last Updated : 14 Mar 2021 03:14 AM
மெட்ராஸ் மாநிலத்துக்கு 1957-ல் நடைபெற்ற தேர்தல் பல வகைகளிலும் முக்கியத்துவம் வாய்ந்தது. 1954-ல் மொழிவாரி மறு சீரமைப்புக்குப் பின் வந்த முதல் தேர்தல். 1954-ல் ராஜாஜி தன் முதல்வர் பதவியை ராஜிநாமா செய்த பிறகு, காமராஜர் அப்பதவிக்கு வந்தார். அவர் முதல்வராக இருந்து சந்தித்த முதல் தேர்தல் அது. அப்போது மெட்ராஸ் மாநிலத்தில் 205 தொகுதிகள் இருந்தன. 204 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் 151 தொகுதிகளில் வெற்றிபெற்றது. திமுகவுக்கு இது முதல் தேர்தல். அண்ணா, கருணாநிதி, க.அன்பழகன் உள்ளிட்ட 15 பேர் திமுகவில் வெற்றிபெற்று சட்டமன்றத்துக்குள் நுழைந்தார்கள். இந்தத் தேர்தலில் காமராஜருக்கு ஆதரவாக பெரியார் பிரச்சாரம் செய்தது குறிப்பிடத்தக்கது. “இந்தத் தேர்தலில் காமராஜரையும் அவரது கட்சிக்காரர்களையும் ஆதரிப்பது எல்லாத் தமிழர்களின் கடமையாகும்” என்று பெரியார் அறைகூவல் விடுத்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT