Published : 28 Nov 2015 10:20 AM
Last Updated : 28 Nov 2015 10:20 AM

நம்மைச் சுற்றிலும் மனிதம்

ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஹரிகிருஷ்ணனின் சேவை பற்றிய செய்தி படித்து மகிழ்ந்தேன். வாழ்க்கையில் வசதி வாய்ப்புகள் உள்ளவர்கள்கூட உதவுவதில்லை. சிலர் பணத்தை நன்கொடையாகக் கொடுப்பதுடன் திருப்தி அடைகின்றனர். ஆனால், உண்மையான சமூக அக்கறையுடன், உடல்ரீதியாகவும், பொருளாதாரரீதியாகவும் சேவை புரிபவர்கள் வெகு சிலரே. அதிலும், ஆதரவற்ற சடலங்களை அடக்கம் செய்ய 24 மணி நேர இலவச சேவை போன்ற காரியங்களை, பிரதிபலன் பாராமல் மனித நேயத்துடன் செய்வது மிகவும் பாராட்டுக்குரியதாகும். இதுபோன்ற தன்னலமற்ற மனித நேயம் பரவலாக வளர வேண்டும்.

- மு. செல்வராஜ், மதுரை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x