Published : 30 Nov 2015 10:30 AM
Last Updated : 30 Nov 2015 10:30 AM

விலைமதிப்பற்ற அடி

எதிர்மறைத் தாக்கங்களே தேர்தல் முடிவாகின்றன என யோகேந்திர யாதவ், ‘பிஹார் சுட்டும் அரசியல் வெற்றிடம்’ கட்டுரையில் குறிப்பிட்டிருப்பது வாஸ்தவம்தான். சமீபகாலமாகத் தேர்தல் வெற்றியை நிர்ணயிப்பது அரசியல்வாதிகளின் மீதான நம்பிக்கையோ நன்மதிப்போ இல்லையே!

ஆளும் கட்சி மீதான அதிருப்தி வேறொரு கட்சிக்குச் சாதகமாகிவிடுகிறது. மக்களின் உண்மையான பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் தலைவர்களை இன்று காண்பது அரிதாகிவிட்டது.

இந்நிலையில், நிதிஷ் குமார் மீது நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. அதே சமயம், அவருடைய கால்களிலும் விலங்குகள் பூட்டப்படாமல் இல்லை என்பதையும் மக்கள் அறிந்தே இருக்கிறார்கள்.

அதை அவர் எப்படி வென்றெடுக்கப்போகிறார் என்பதைப் பொறுத்து, அவர் அரசியல் பயணம் அமையப்போகிறது. எது எப்படி இருப்பினும் பாஜகவுக்கு மிகவும் சரியான நேரத்தில் தரப்பட்டுள்ள இந்த அடி விலைமதிப்பற்றது என்பதில் ஐயமில்லை.

- சிவ. ராஜ்குமார், சிதம்பரம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x