Published : 28 Nov 2015 10:24 AM
Last Updated : 28 Nov 2015 10:24 AM

‘உடல்மெய்’!

உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் முன்னிலை வகிப்பதை எடுத்துச்சொன்ன ‘உறுப்புதானம்: தமிழகம் காட்டும் வழி!’ கட்டுரை பெருமைகொள்ளச் செய்கிறது.

உடலிலிருந்து உயிர் பிரிந்தால் அது வெறும் சடலம் என்ற நிலையை மருத்துவம் மாற்றியுள்ளது. இறந்த சில மணி நேரங்களில் மனித உடலின் பல உறுப்புகளைக் கொண்டு இன்னும் பல மனிதர்களை வாழ வைக்க முடியும் என்பது எத்தனை மகத்தானது! உடலை ‘மெய்’ என அழகு தமிழில் சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை. ‘மெய்’ என்றாலே உண்மை என்றுதான் பொருள்.

உடல் தானம் செய்யப்பட்ட ஓர் உடலில் இருக்கும் உறுப்புகளைக் கொண்டு பல உயிர்களைக் காப்பாற்ற முடியும் என்றால், அத்தகைய உடலை ‘மெய்’ என அழைப்பது மிகவும் பொருத்தமானதே.

- செ. ஜெயகுமார், வீரபாண்டி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x