Published : 19 Oct 2015 11:10 AM
Last Updated : 19 Oct 2015 11:10 AM
கலையின் அழிவு என்பது அந்த மண்ணின் கலாச்சார மற்றும் பாரம்பரியத்தின் அழிவைச் சார்ந்ததாகவே அமையும். கலையைப் போற்றி மதித்து ஆடும் கலைஞர்கள், தங்களின் வயிற்றை நிரப்ப ஆபாசமாக ஆடும் எல்லைவரை சென்றதற்கு கலைகளைக் கண்டுகொள்ளாத அரசும், கலையின் மீதான தனது பார்வையை மோசமானதாக மாற்றிய மக்களும்தான் காரணம்.
காமாட்சி அம்மா சொன்னது போல, 'மக்கள் ஜோரா இருக்காங்க; கலாச்சாரம் தான் அநாதை ஆயிடுச்சு' எனச் சொல்லும் நிலை ஏற்படுவதற்கு முன் களத்தில் செயலாற்றி கலையையும், கலைஞர்களின் வாழ்வையும் காக்கும் பொறுப்பு அரசுக்கு இருக்கிறது.
- ஜோ. செந்தில்நாதன்,கீழக்கரை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT