Published : 26 Oct 2015 12:34 PM
Last Updated : 26 Oct 2015 12:34 PM

உழைப்பின் மீதான உரிமை

ஆதிச் சமூகத்தில் மனிதர்கள் தங்களின் செயல்பாடு மற்றும் உழைப்பின் வழியாக தங்களுடைய இயங்கியலையும் மனிதத்தன்மையையும் உணர்ந்து கொண்டனர். மேலும், சுமுகமாக இருக்கவும் சமூக உணர்வோடு செயல்படவும் உழைப்பு ஒரு பாலமாக இருந்தது.

காலப்போக்கில் தொழிலாளர்களிடமிருந்து உழைப்பு சுரண்டப்பட்டு, உழைப்பு மீதான உறவும் உரிமையும் துண்டிக்கப்பட்டதால் உழைப்பிலிருந்து அவர்கள் அந்நியப்பட்டு விட்டனர். இது உழைப்பு மீது தொழிலாளிக்கு அதிருப்தி ஏற்படக் காரணமாக இருக்கிறது. ஆனாலும் தவிர்க்க முடியாமல் வெறும் சம்பளத்துக்காக வேலை பார்க்க வேண்டிய நிலைக்கு உட்படுகின்றனர்.

தொழிலாளர்களை வெறும் கருத்துகளின் வழியாக அணுகாமல் அவர்களைப் புரிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும் என்பதை 'சம்பளத்துக்காகத்தான் வேலை பார்க்கிறோமா?' கட்டுரையில் பெர்ரி ஷ்வார்ட்ஸாகின் சிறப்பாக எடுத்துரைத்திருக்கிறார்.

- நா.தங்கபாண்டி, ஓசூர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x