Published : 17 Oct 2015 10:55 AM
Last Updated : 17 Oct 2015 10:55 AM

இந்தக் கலை செத்துடக் கூடாது

‘மனிதர்கள்’ பகுதியில் ‘திருவிழா ஜோரா நடக்குது… சாமிதான் அநாதை ஆயிடுச்சு’ என்ற கட்டுரை படித்து நெஞ்சு கனத்தது. நாட்டுப்புறக் கலை பற்றிய நினைப்பே மாறிவிட்டது என்ற குற்றச்சாட்டும் அதற்கான எடுத்துக்காட்டும் நாம் அனைவரும் வெட்கித் தலைகுனிய வேண்டிய விஷயமாகும்.

இறுதியில், அந்த நாட்டுப்புறக் கலைஞர் நாடி ராவின் தொலைபேசி எண்ணை - 9443783209 - குறிப்பிட்டு இருந்தது, கட்டுரை ஆசிரியரின் சமூக அக்கறையைப் பிரதிபலிப்பதாக இருந்தது.

பின்குறிப்பு: நானும் அந்தத் தொலைபேசி எண்ணை எனது நாட்குறிப்பில் குறித்துக்கொண்டேன் - எதிர்காலத்தில் பயன்படுத்த!

- பொ. நடராசன், நீதிபதி (பணி நிறைவு) உலகனேரி, மதுரை.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x