Published : 04 Sep 2015 11:04 AM
Last Updated : 04 Sep 2015 11:04 AM
`எல்ஐசி எனும் வைரம்’ கட்டுரை படித்தேன். அரசுக்கும் மக்களுக்கும் லாபம் தரும் வைரத்தைப் பட்டை தீட்டாவிட்டாலும் அதைத் `தனியார்மயம்' மூலம் பாழாக்காமல் இருந்தாலே போதும்.
ஆனால், தற்போதைய `தனியார்மய அபிமானியான' மத்திய அரசு, எல்ஐசி எனும் பொன்முட்டை இடும் வாத்தின் கழுத்தை நெரிப்பதில் மிக ஆர்வமாக இருக்கிறது.
இதன் மூலம் அரசு மற்றும் மக்கள் பாதிப்புக்குள்ளாவது மட்டுமின்றி, எல்ஐசி எனும் மிகப் பிரம்மாண்டமான இந்த மாளிகை உருவாகக் காரணமான - இந்தியா முழுவதும் உள்ள - 10 லட்சத் துக்கும் மேற்பட்ட எல்ஐசி முகவர் களும் அவர்களது குடும்பத்தினரும் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாவார்கள். நாட்டின் பொருளாதாரத்தில் மிக முக்கியப் பங்கு வகிக்கும் எல்ஐசி யைத் தனியாருக்குத் தாரை வார்க் காமல் அரசு செயல்பட வேண்டும்.
எஸ்.சாகுல் ஹமீது,மதுரை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT