Published : 04 Sep 2015 11:03 AM
Last Updated : 04 Sep 2015 11:03 AM

ஆங்கிலமே ஆரோக்கியம்

ஐ.நா. சபையில், இந்தியை அலுவல் மொழிகளில் ஒன்றாக ஆக்குவதற்கு இன்றைய மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் கருத்து தெரிவித்திருப்பதும், இந்திய அரசு அதற்கான செலவினங்களை ஏற்கத் தயாராக நடவடிக்கை எடுப்பதும் மிகவும் தவறான போக்காகும். இந்தியா 22-க்கும் மேற்பட்ட பிரதான மாநில மொழிகளைக் கொண்ட நாடு.

நேரு மொழிவாரியாக மாநிலங்களைப் பிரித்தும், கூட்டாட்சி முறையில் மத்திய அரசு நாடாளுமன்ற, சட்டமன்ற பிரதிநிதித்துவம் அளித்து கொள்கை முடிவுகள், தீர்மானங்கள் நிறைவேற்றுவதும் மக்களாட்சியின் மகத்துவம் ஆகும். இந்நிலையில், இந்தியாவின் எந்த மாநிலத்தவரும் ஐ.நா. சபையில் தேசப் பிரதிநிதியாகக் கருத்துக்களைப் பதிவு செய்யவேண்டிய நிலையில், எப்போதும்போல் ஆங்கிலம் அலுவல்மொழியாக இருப்பதே ஆரோக்கியமானது.

உலக நாடுகளுக்கு எளிதில் விளங்கும் அலுவல் மொழியை ஏன் மாற்ற வேண்டும்? இந்தியை அலுவல் மொழியாக்கும் இந்தி பேசும் மக்களின் இதுபோன்ற நடவடிக்கைகள், மற்ற மாநில மொழியாளர்களை இரண்டாம்தரக் குடிகளாக்கும் பாதகச் செயலாகும். இந்தியைத் தாய்மொழியாகக் கொள்ளாத எந்த இந்தியக் குடிமகனும் இதனை விரும்ப மாட்டான்.

- கு.மா.பா. திருநாவுக்கரசு,சென்னை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x