Published : 14 Sep 2015 10:55 AM
Last Updated : 14 Sep 2015 10:55 AM
தமிழக முதல்வரின் முயற்சியால் நடைபெற்ற புதிய முதலீட்டுக்கான மாநாட்டின் மூலம் தமிழகத்துக்கு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் முதலீடுகள் குவியப்போகின்றன.
இது வரவேற்கப்பட வேண்டிய செயல்தான். ஆனால், கோடிக்கணக்கில் முதலீடு செய்ய விரும்பும் முதலீட்டாளர்கள் அதற்கேற்ப குறைவான விலையில் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்கள், சாலை வசதி, மின் வசதி உள்ளிட்டவற்றை இலவசமாக அல்லது சலுகை அடிப்படையில் எதிர்பார்ப்பார்கள். நிலம் கையகப்படுத்தும் மசோதாவை மத்திய அரசு கைவிட்டுவிட்ட நிலையில், தமிழக அரசுக்கு இது எப்படிச் சாத்தியமாகும் என்று தெரியவில்லை.
பெரு நிறுவனங்களுக்கு லாபம் தருவதாக மட்டுமல்லாமல், பொதுமக்களின் மேம்பாட்டுக்கு உதவும் எனில், இதுபோன்ற திட்டங்கள் வரவேற்புக்குரியவைதான்!
- கேப்டன் யாசீன்,திண்டுக்கல்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT