Published : 12 Sep 2015 10:41 AM
Last Updated : 12 Sep 2015 10:41 AM
அரசியல் கட்சிகளின் ஆதார மான சித்தாந்த அமைப்புகள் தொடர்ந்து செயல்பட வேண்டும் என்பதைச் சிறப்பாக எடுத்துரைத்தது ‘ஆர்எஸ்எஸ்ஸிடம் கற்றுக்கொள்ள ஒரு பாடம்’ கட்டுரை.
சித்தாந்தங் களின் அடிப்படையில் இயங்கும் திராவிடர் கழகத்தில் தொடர்ந்து பயிற்சி வகுப்புகளும், சுயமரியாதை இயக்கத்தின் வரலாறுகளை இக்கால இளைஞர்களுக்குச் சொல்லிக்கொடுக் கும் பட்டறைகளும் இடைவிடாமல் நடந்துவருகின்றன.
சமீபத்தில்கூட ஆகஸ்ட் 20 தொடங்கி 23 வரை குற்றாலத்தில் நான்கு நாட்கள் பெரியாரியல் பயிற்சி வகுப்புகள், கி.வீரமணி தலைமையில் பல்வேறு அறிஞர் பெருமக்கள் கலந்துகொண்டு பாடங்களை நடத்தினர். இது போன்ற பயிற்சிகள் காலத்தின் கட்டாயம் என்பதைத் தங்கள் கட்டுரை உணர்த்தியது.
- தி.என்னாரெசு பிராட்லா, மாவட்டத் தி.க. செயலாளர், காரைக்குடி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT