Published : 09 Sep 2015 10:07 AM
Last Updated : 09 Sep 2015 10:07 AM

எழுத்தறிவின் அவசியம்

உலக எழுத்தறிவு நாளான செப்டம்பர் 8 அன்று வெற்றிக்கொடி இணைப்பில் வெளிவந்த ‘இந்தியாவுக்காகக் காத்திருக்கும் வரலாறு’, கருத்துப்பேழை பகுதியில் வெளியான ‘கல்வியும் இன்றைய தலைமுறையும்’ ஆகிய இரண்டு கட்டுரைகளையும் வாசித்தேன். கல்வியின் இரு வேறு பார்வைகளில் இரண்டு கட்டுரைகளும் அமைந்திருந்தன. எழுத்தறிவின் இன்றைய நிலையை ‘இந்தியாவுக்காகக் காத்திருக்கும் வரலாறு’ கட்டுரை தெளிவாக எடுத்துரைக்கிறது.

ஒரு மொழியில் படிக்கவும், எழுதவும் இயலாத நிலையில் இருப்பதையே எழுத்தறிவின்மை என்று ஐ.நா. வரையறை செய்துள்ளது. கல்வியறிவின் எல்லைக்கும் எழுத்தறிவின் எல்லைக்கும் இடையே உள்ள அறிவுசார்ந்த இடைவெளியை நாம் புரிந்துகொள்ள வேண்டியுள்ளது. இதைத்தான் ‘கல்வியும் இன்றைய தலைமுறையும்’ கட்டுரை சுட்டிக்காட்டுகிறது. எழுத்தறிவு வழங்க வேண்டிய புனிதமான கடமையைச் செய்ய வேண்டிய அரசுகள் இக்கடமையைச் செய்வதில் மிகுந்த அக்கறை கொள்ள வேண்டும். எழுத்தறிவு பெறவே வாய்ப்பில்லாத ஒரு மக்கள் கூட்டம் உள்ள உலகில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்பது மிகப் பெரிய அவலம்.

- சு.மூர்த்தி, காங்கயம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x