Published : 25 Aug 2015 10:58 AM
Last Updated : 25 Aug 2015 10:58 AM

இதயத்தில் கலக்க ‘தி இந்து’வே காரணம்

பொதிகையில் பிறந்த தாமிரபரணி பற்றிய தொடர், வெறும் நீரின் வரலாறு மட்டுமல்ல; வரலாற்று ஆய்வாளர் ரொமீலா தாப்பர் சொன்னதுபோல் ‘‘ஹரப்பா நாகரிகத்துக்கு முன்பே தாமிரபரணிக் கரையில் ஏர் உழவு இருந்தது” என்ற பெருமை மிகு மனிதகுலத்தின் வரலாறு அது. இத்தகைய சிறப்பான வரலாறு பெற்ற நதியைத்தான் நாம் மாசுபடுத்தவும் கொள்ளையடிக்கவும் கண்டுகொள்ளாமல் இருப்பதன்மூலம் அனுமதிக்கிறோம் என்பது நிகழ்கால வேதனை. அதே நேரத்தில், நதியை யும் இதன் பெருமையையும் காக்க மக்கள் குரல் ஓங்கி ஒலித்துவருவது உற்சாகமளிக்கிறது. தாமிரபரணி பொதிகையில் தொடங்கி, சங்கு முகத்தில் கலந்ததுபோல், இந்தக் கட்டுரை ‘தி இந்து’வில் தொடங்கி எங்கள் இதயத்தில் கலந்தது. ‘தி இந்து’வுக்கு நன்றி!

- சு. ஜெகதீசன்,அம்பை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x