Published : 17 Mar 2020 09:20 AM
Last Updated : 17 Mar 2020 09:20 AM
எப்போதும் மக்கள் கூட்டத்தால் நிறைந்திருக்கும் உலகின் பல முன்னணி மையங்கள் வெறிச்சோடியிருக்கின்றன. வீதிகளில் சப்தமில்லை. சாலைகளில் சலனமில்லை. கரோனா தொற்றைத் தவிர்ப்பதற்காக வீட்டுக்குள்ளேயே மக்கள் தங்கள் செயல்பாடுகளைச் சுருக்கிக்கொண்டிருக்கிறார்கள். தடுப்பு மருந்து இல்லாத ஒரு தொற்றுநோயை விரட்டியடிப்பதற்கு அரசாங்கம் மட்டுமல்ல, மக்களும் சேர்ந்துதான் சுயக்கட்டுப்பாட்டை உருவாக்கிக்கொள்ள வேண்டும். கீழே உள்ள படங்கள் உலகத்தின் விழிப்புணர்வையும், நம்முடைய ‘விழிப்புணர்’வையும் காட்டுகின்றன. அத்தியாவசியமாக வெளியே பயணிப்பது தவிர்க்க முடியாததாக இருக்கலாம்; எல்லாவற்றையும் அப்படிச் சொல்லிவிட முடியுமா என்பதற்கு தி.நகரில் ஞாயிறு அன்று கூடிய கூட்டம் ஒரு உதாரணம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT