Published : 26 Aug 2015 10:36 AM
Last Updated : 26 Aug 2015 10:36 AM

ஜனநாயக வெற்றி

பன்னெடுங்காலமாகப் புறக்கணிக்கப்பட்டு வந்த இஸ்லாமிய, தமிழ் மக்கள் தெளிவானதொரு முடிவைத் தந்திருப்பதன் மூலம் இலங்கையில், மக்களாட்சி நிலைநாட்டப்படும் என்பதற்கான அறிகுறிகள் தோன்ற ஆரம்பித்துள்ளதையே ‘ஜனநாயகத்தை வலுவாக்குவதற்கான தெளிவான சமிக்ஞை’என்கிற தலையங்கம் வெளிப்படுத்துகிறது.

இது ஒரு மகிழ்ச்சிக்குரிய செய்தி. ஆசியப் பிராந்தியத்தில், நாடாளுமன்ற அடிப்படையிலான ஆட்சிமுறைமீது, நம்பிக்கைகொண்ட நாடாக இலங்கை பரிமளிக்கப்போகிறது என்ற செய்தி, இந்திய நாடாளுமன்ற முறைக்குக் கிடைத்த வெற்றி என்றே எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்.

மக்களாட்சிக் கொள்கைகளுக்கு எதிரான செயல்களுக்கு மக்கள் சவுக்கடி கொடுத்து, இனம், சாதி போன்ற பிற்போக்கான எண்ணங்கள் நவீன உலகுக்குத் தேவையற்றவை என்பதை நிலைநாட்டியுள்ளனர்.

- அ. மயில்சாமி, கண்ணம்பாளையம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x