Published : 30 Jul 2015 10:17 AM
Last Updated : 30 Jul 2015 10:17 AM

காலத்தால் அழியாத அஞ்சலி

அப்துல் கலாம் பிறந்து, வளர்ந்து கல்வி கற்ற ராமேஸ்வரத்தில் ஒரு கலை அறிவியல் கல்லூரியை நிறுவி, அந்தக் கல்லூரிக்கு அப்துல் கலாம் என்று பெயரிட்டால், அது அவருக்கு முதல்வர் செய்யும் மிகச் சிறப்பான, காலத்தால் அழியாத நினைவு அஞ்சலியாக இருக்கும் என்பதை ‘தி இந்து’ நாளிதழ் மூலம் பரிந்துரை செய்ய ஆசைப்படுகிறேன்.

மேக்கி நூஹுதம்பி,மின்னஞ்சல் வழியாக…

***

இந்தியாவின் காலக் கண்ணாடி

தாய்மொழித் தமிழில் அடிப்படை அறிவியல் கற்றுயர்ந்த பார் போற்றும் விஞ்ஞானி அப்துல் கலாம். சாதி, மதம் கடந்த மனித நேயத்தை இளைஞர் மனதில் கனவாய் விதைத்த மெய்ஞ்ஞானி. பொக்ரான் சோதனை செய்து, இந்தியாவை வல்லரசாக்கப் பாதையமைத்த விஞ்ஞானி. மூங்கில் துளை செல்லும் காற்றாய் காலம் கடந்தும், மக்கள் நெஞ்சில் நீங்கா சிகரமாய் நிற்கும் அப்துல் கலாமின் பாதம் பணிகிறோம்.

- சு.தட்சிணாமூர்த்தி, கோவை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x