Published : 09 Jul 2015 10:49 AM
Last Updated : 09 Jul 2015 10:49 AM

நந்தகுமாரைப் பின்பற்றலாமே!

மனுஷ்ய புத்திரன் எழுதிய ‘ஒரு புத்தகக்காட்சி போதுமா?' கட்டுரை படித்தேன். தனியார் அமைப்புகள் சிறு நகரங்களில் புத்தகக்காட்சி நடத்துவதற்கும் பபாஸி போன்ற பெரும் அமைப்பு கண்காட்சி நடத்துவதற்கும் பெரிய வேறுபாடு உண்டு.

பதிப்பாளர் என்பதால், சிறிய புத்தகக் கடைகளின் உண்மை நிலையை துல்லியமாகப் பதிவுசெய்திருந்தார் மனுஷ்ய புத்திரன்.

இரண்டு வருடங்களாக ராமநாதபுரத்தில் மாவட்ட ஆட்சியர் நந்தகுமார் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், தனியார் ஒத்துழைப்போடு மிகப் பிரம்ண்டமாகப் புத்தகக்காட்சியை நடத்திவருகிறார்.

அனைத்து அரசுப் பள்ளி மாணவ - மாணவிகளையும் இலவசமாக புத்தகக்காட்சிக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்திருந்தார். கண்காட்சிக்குச் சென்ற ஒவ்வொரு மாணவரும் குறைந்தது ஒரு புத்தகத்தையாவது வாங்கிவந்தது குறிப்பிடத் தக்கது. இதுபோன்று ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரும் முயற்சி எடுத்தால், நிச்சயம் பெரிய வெற்றி கிட்டும்.

- ச.கிறிஸ்து ஞான வள்ளுவன்,வேம்பார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x