Published : 28 Jul 2015 10:47 AM
Last Updated : 28 Jul 2015 10:47 AM

குறுக்கே நிற்கும் சாதி

சாதி அடிப்படையில் இழைக்கப்படும் கொடுமைகளை விவரித்த ‘மனித விரோதமும் தேச விரோதமும்’ தலையங்கம் அருமை.

சமத்துவம், சுதந்திரம், சகோதரத்துவம் ஆகிய ஜனநாயக அரசியல் நெறிகளுக்காக உலகில் போராட்டம் தொடங்கி, சுமார் ஐந்நூறு ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. பெரும்பாலான நாடுகள் ஜனநாயக நெறிகளைக் குடிமக்களின் அன்றாட வாழ்வியல் நெறிகளில் ஒன்று கலக்கச் செய்யும் குறிக்கோளை எட்டுவதை நோக்கிப் பயணிக்கின்றன.

ஆனால், மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில், அதற்கேற்ற சூழல் அமையாதவாறு சாதிப் படிநிலை குறுக்கே நிற்கிறது. சாதி, மத நம்பிக்கைகள் வேரூன்றியுள்ள இந்தியச் சமூக அமைப்பின் இறுக்கத்தை உடைப்பதும் உண்மையான ஜனநாயக அமைப்பை உருவாக்குவதும் காலத்தின் தேவை.

- சு.மூர்த்தி, காங்கயம்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x