Published : 21 Jul 2015 11:40 AM
Last Updated : 21 Jul 2015 11:40 AM

தீராப் பெருங்கதைகள்

மகாபாரதம் படிக்கப் படிக்க, கேட்கக் கேட்கத் தீராப் பெருங்கதை.

நவீன இலக்கியம்போல் இன்றும் பாரதம் புதுமையாய் இருப்பது காலம்கடந்தும் அதன் புகழை எடுத்துரைப்பதாய் அமைகிறது.

பல முகங்களை உள்வாங்கிய கிருஷ்ண துவைபாயனர் என்கிற வேதவியாசர், ஆங்காங்கே சிதறிக்கிடந்த தர்மசிந்தனைகளை ஒன்றிணைத்து அற்புதமான பாத்திரங்களால் சேர்த்துக்கட்டி மகாபாரத இதிகாசத்தை உருவாக்கினார். அவருக்கு பிரபஞ்சன் தன் மொழிநடையால் பெருமைசேர்த்திருக்கிறார்.

நவீன பார்வையில் மகாபாரதம் எனும் நூல் திறானாய்வுக் கட்டுரையாசிரியர், மிக நேர்த்தியாகப் பாராட்டும் இடங்களில் பாராட்டியும் மறுக்கும் இடங்களில் மிகநாசூக்கான சொற்களைக் கையாண்டு திறனாய்வு செய்திருக்கிறார்.

முனைவர் சௌந்தர மகாதேவன்,திருநெல்வேலி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x