Published : 29 Jun 2015 10:46 AM
Last Updated : 29 Jun 2015 10:46 AM

நாமும் கைகோப்போம்

சாதிக் கொடுமைகளைக் களைய தமிழகம் முழுவதும் வீதி நாடகம் மூலம் விழிப்புணர்வு நடத்த காவல் துறையும் கல்வித் துறையும் எடுத்துள்ள புதிய முயற்சி நல்ல பலனைத் தரும். நம் சமூகம் சாதி என்ற வலையால் பின்னப்பட்டுள்ளதால் உடனடியாக அவற்றிலிருந்து மீள முடியாவிட்டாலும், இதுபோன்ற வீதி நாடகங்கள் மூலம் அதனுடைய தாக்கத்தைக் குறைக்க முடியும்.

இனிமேல், பள்ளி ஆண்டு விழாக்களில் சாதிக் கொடுமைபற்றிய விழிப்புணர்வு நாடங்களுக்கு முக்கியத்துவம் தரப்பட வேண்டும். மனிதப் பிறப்பு மகத்தானது.

சாதி, மதத்தின் பெயரில் மனித உயிர்களும் உடைமைகளும் காவு வாங்கப்படுவதைத் தடுக்க கல்வித் துறையும் காவல் துறையும் எடுக்கும் முயற்சியில் நாமும் கைகோப்போம். சாதிகளற்ற சமுதாயத்தை உருவாக்குவோம்.

- மு.க. இப்ராஹிம்,வேம்பார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x