Published : 23 Jun 2015 10:29 AM
Last Updated : 23 Jun 2015 10:29 AM

யாருக்கும் வெட்கமில்லை

இயற்கையின் விலையில்லா கொடைகளான பஞ்ச பூதங்கள்தான் இப்பூவுலகின் முதல் ஆதாரங்கள்.

முக்கியமாக நீர் தற்போது ‘சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்’ என்ற பெயரில் விற்பனை பொருளானதுதான் வேதனையின் உச்சம். நீர் தமிழர்களின் வாழ்வியலில் முதன்மையானதும் மிகவும் முக்கியமானதுமான சடங்குப்பொருள் என்பார் அறிஞர் தெ.பரமசிவன்.

தமிழ்நாட்டில் ஆறுகள் மற்றும் நீர்நிலைகளின் தற்போதைய நிலைமை கவலைக்குரிய ஒன்றாகவே காணப்படுகிறது. சின்னச் சின்ன நீர் நிலைகள் வீட்டடி மனைகளாக மாற்றப்பட்டு அழிந்தே போய்விட்டன. நதிகளின் வாக்குமூலங்கள், நம்மை வெட்கமடையச் செய்கின்றன.

-விளதை சிவா,சென்னை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x