Published : 03 Jun 2015 10:54 AM
Last Updated : 03 Jun 2015 10:54 AM

ரோஹிங்கிய பிரச்சினை மனித குலத்துக்கே அவமானம்

ரோஹிங்கிய முஸ்லிம்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள்பற்றி வெளிவந்துள்ள கட்டுரை கல்மனதையும் கரையவைத்துவிடும்.

ரோஹின்ஜா முஸ்லிம்கள் கடலிலேயே தத்தளித்துக்கொண்டிருக்கிறார்கள் என்ற செய்தியைப் படித்தபோது, ஐ.நா. போன்ற அமைப்புகளும் அமெரிக்கா போன்ற நாடுகளும் அமைதிகாப்பது மிகவும் வேதனையளிக்கிறது.

அதிலும் அவர்களைக் கொடுமைப்படுத்தும் புத்த மதத்தினரைக் கண்டிக்காமல் மவுனம் சாதிக்கும், சமாதானத்துக்கு நோபல் பரிசு பெற்ற ஆங் சான் சூச்சி கண்டனத்துக்குரியவர்.

ஒரு குறிப்பிட்ட இனத்தவரை உலகில் வாழத்தகுதியற்றவர் என்று பலமிக்க வேறொரு சமுதாயம் முடிவெடுத்து, அவர்களை வேரோடு அழிக்க நினைப்பது கொடுமையிலும் கொடுமை. நாகரிக உலகில் இன்னமும் இனப்படுகொலைகள் நடந்துகொண்டிருப்பது மனித குலத்துக்கே அவமானம்!

- கே.பி.எச். முகம்மது முஸ்தபா. திருநெல்வேலி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x