Published : 24 Jun 2015 10:30 AM
Last Updated : 24 Jun 2015 10:30 AM

சுபாஷ் சந்திர போஸின் முன்னோடி

வராற்று ஆய்வாளர் ராமச்சந்திர குஹா எழுதிய `இன்றும் ஜப்பானில் நினைவில் உள்ள போஸ்' கட்டுரை படித்தேன்.

சுபாஷ் சந்திர போஸைப் பற்றி மட்டுமே அதிகம் அறிந்த எனக்கு, ராஷ் பிஹாரி போஸைப் பற்றிய செய்தி ஆச்சரியத்தையும் அவரைப் பற்றி மேலும் அறிய வேண்டுமென்ற ஆர்வத்தையும் தூண்டியது.

ஆங்கில அரசாங்கத்தில் பணிபுரிந்தாலும், வெடிகுண்டு தயாரித்து வீசுமளவுக்குப் போனது என்றால், அவரின் தேசப்பற்று எப்படிப்பட்டது என்பதை அறிந்துகொள்ள முடிந்தது.

காந்தியடிகள் மற்றும் சுபாஷ் சந்திர போஸின் முன்னோடியாய் இருந்து செயல்பட்டவரைப் பற்றி 100 ஆண்டுகள் கடந்தும் ஜப்பான் மக்கள் நினைவில் வைத்திருக்கும்போது, நாம் அவரைப் பற்றி அறியாமல் இருப்பது வெட்கப்பட வேண்டிய விஷயம்.

மறக்கக் கூடாத ஆளுமைகளை அவ்வப்போது நினைவூட்டி, எங்களைப் போன்ற இளைய தலைமுறை பழைய வரலாற்றை அறிந்துகொள்ள வைக்கும் அரிய முயற்சி தொடரட்டும்.

- ச. கிறிஸ்து ஞான வள்ளுவன்,வேம்பார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x