Published : 29 May 2015 10:36 AM
Last Updated : 29 May 2015 10:36 AM

எப்போதும் சாத்தியமே

வன விலங்குகளும் வன வாழ் மக்களும் எல்லா இடத்திலும் பிரச்சினையின்றி வாழ்வது எப்போதுமே சாத்தியம்.

அதுதான் உண்மையும்கூட! ஆனால், இரவில் மரங்களைத் திருட்டுத்தனமாக வெட்டப் போகும்போது யானை மிதித்துச் செத்தால் ஊருக்குள் யானை வந்து கொன்றுவிட்டது என்ற கதையும் சட்டவிரோதமாக வேட்டையாடச் சென்று, மிருகங்களைக் கொல்லும் மனித மிருகங்களும்... காட்டுவாசிகளிடம் ஏமாற்றிப் பிழைப்பவர்களும் கட்டிவிடும் கதைகள்தான் ஊடகங்களில் அதிகம் வரும்.

மனிதன் மனிதனாக வாழ வேண்டும். அதிகமாக ஆசைப்பட்டு மிருகங்களையும் வனவாசிகளையும் துன்புறுத்தும் சில திருடர்களைக் கட்டுப்படுத்தினாலே இயற்கையும் வனமும் வனவிலங்குகளும் பெருமளவில் காக்கப்படும்!

சிவா,தி இந்து’ இணையதளம் வழியாக…

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x