Published : 20 May 2015 10:34 AM
Last Updated : 20 May 2015 10:34 AM

ஆசிரியர்தான் முன்மாதிரி

நம் கல்வி… நம் உரிமை! தொடரில் ‘விதை நெல்லும் நாற்றங்காலும்…’ கட்டுரையில் அரசுப் பள்ளியின் நிலைமையைக் கட்டுரையாளர் அருமையாக விளக்கியுள்ளார். பத்மா டீச்சர் பாடம் நடத்திய விதமும் சரி… மாணவர்களை அவர் நடத்திய விதமும் சரி… ஆசிரியப் பணி அறப்பணி என்று புரிந்து நடந்துள்ளார்.

ஆசிரியர் நடத்தும் பாடத்தை மாணவர்கள் கற்றுக்கொள்கிறார்களோ இல்லையோ ஆசிரியரின் இயல்பை, நடத்தையை மாணவர்களின் மனம் எளிதில் ஆக்கிரமித்து அவரைப் போலவே நடந்துகொள்ள முயற்சிக்கும். ஒவ்வொரு மாணவருக்கும் அவரது ஆசிரியர்தான் முன்மாதிரி.

அதனால்தான் ஆசிரியரை அன்றே குரு என்று அழைத்திருக்கிறார்கள்.

- வீ. சக்திவேல்,தே.கல்லுப்பட்டி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x