Last Updated : 07 May, 2015 12:41 PM

 

Published : 07 May 2015 12:41 PM
Last Updated : 07 May 2015 12:41 PM

கிருஷ்ணாவின் பயணம்: நடந்தாய் வாழி... கிருஷ்ணா...

தமிழகத்துக்கு இதுவரை ரூ.662 கோடி செலவு

-டி.செல்வகுமார்

தெலுங்கு கங்கை திட்டம் தொடங்கியதில் இருந்து (1983 முதல்) இதுவரை ஆந்திர அரசுக்கு தமிழக அரசு இது வரை ரூ.662 கோடி கொடுத்துள்ளது.

தெலுங்கு கங்கை திட்ட ஒப்பந்தப்படி, கிருஷ்ணா நதியில் ஆந்திர அரசு ஆண்டு தோறும் ஜூன் முதல் செப்டம்பர் வரை 4 மாதங்கள் தலா 3.9 டிஎம்சி வீதம் 15.6 டிஎம்சி தண்ணீர் எடுத்து சைலம் அணையில் தேக்குகிறது. பின்னர், அங்கிருந்து சோமசீலா, கண்டலேறு அணைகள் வழியாக ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டிஎம்சி-யும், ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டிஎம்சி-யும் சென்னை குடிநீருக்கு திறந்துவிடப்படுகிறது.

கிருஷ்ணா குடிநீர் வழங்கும் திட்டத்துக்கான செலவு முழுவதும் பயன்படுத்தப்படும் தண்ணீரின் அளவுக்கு ஏற்ப விகிதாச்சார அடிப் படையில் ஆந்திரா, தமிழ்நாடு மாநிலங்கள் பங்கிட்டுக் கொள்ள வேண்டும் என்கிறது ஒப்பந்தம். கிருஷ்ணா நீர் கால்வாயில் இரு மாநிலங்களுக்கான பொது கால் வாய் பகுதிகளில் (மொத்தம் 14 இடங்கள்) பராமரிப்பு உள்ளிட்ட செல வினங்களுக்காக ரூ.4 ஆயிரம் கோடி செலவிட்டிருப்பதாக ஆந்திரம் கூறுகிறது.

இருமாநிலங்களுக்கும் பொது வான கால்வாய் பகுதிகளில், கள ஆய்வு செய்தும், சம்பந்தப் பட்ட ஆவணங்களை சரிபார்த்தும் அவ்வப்போது செலவுத் தொகையை கொடுத்து வருகிறது தமிழக அரசு. அந்த அடிப்படையில் தெலுங்கு கங்கை திட்டம் தொடங்கிய 1983-ம் ஆண்டு முதல் இந்தாண்டு மார்ச் வரை ரூ.662 கோடியை ஆந்திராவுக்கு தமிழ்நாடு வழங்கியுள்ளது. 1983-ல் இருந்து 1996 வரை ரூ.512 கோடியும், குறைந்தபட்சமாக 1985, 1995-ல் தலா ரூ.5 கோடியும், அதிகபட்சமாக 2013ல் ரூ.100 கோடியும், இந்தாண்டு மார்ச் மாதம் ரூ.50 கோடியும் தமிழகம் வழங்கியுள்ளது. கிருஷ்ணா நீரைப் பயன்படுத்தி ஆந்திர அரசு தனது பாசனப் பகுதியை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இப்போதுகூட 3 லட்சம் ஏக்கர் பாசனத்துக்கான பணிகள் நடக்கின்றன.

நீர் திறக்கப்படும் காலத்தை மாற்ற திட்டம்

ஜூன் 1 முதல் மே 31 வரையிலான தண்ணீர் ஆண்டைக் கணக்கிட்டு கிருஷ்ணா நீர் திறந்துவிடுவதால், இரண்டு போகம் சாகுபடி செய்யும் ஆந்திர விவசாயிகள், 3-வது போகம் சாகுபடி செய்யவும் முயற்சிக்கிறார்கள். இதனால், சென்னைக்கு தேவையான அளவு கிருஷ்ணா நீர் வந்து சேராமல் போய்விடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. எனவே, கிருஷ்ணா நீர் திறந்துவிடும் காலத்தை மாற்றுவது குறித்தும், சென்னைக்கு கூடுதலாக கிருஷ்ணா நீர் வரும்போது அதனை தேக்கி வைப்பதற்கான கட்டமைப்பை ஏற்படுத்துவது பற்றியும் பொறியாளர்கள் குழு ஆலோசனை தெரிவித்துள்ளது. அது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது.

சென்னைக்கு நீரைப் பிரிக்கும் சாய்கங்கா கால்வாய்

- கி.கணேஷ்

சென்னைக்கான கிருஷ்ணாநீரின் பங்கு சைலம் நீர்த்தேக்கத்தில் இருந்து வந்தாலும் அந்த நீரை ஒழுங்குபடுத்தி நமக்கு அனுப்புவது கண்டலேறு அணையில் அமைந்துள்ள முதன்மை நீர்ப்போக்கிதான். கண்டலேறு அணைக்கு தென்பகுதியில் 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இந்த முதன்மை நீர்ப்போக்கி வழியாக தான் கண்ட லேறு- பூண்டி கால்வாயில் நீர்திறந்து விடப் படுகிறது.

கண்டலேறு முதன்மை நீர்ப்போக்கி பகுதியை பார்வையிட சென்ற போது அங்கு அணையில் இருந்து தண்ணீர் வெளியேறும் பகுதியில் கட்டப் பட்டுள்ள சுவரில் உள்ள கசிவை அடைக்கும் பணிகள் நடந்து கொண்டிருந்தது. முதன்மை நீர்ப்போக்கியின் ஐந்து மதகுகளும் மாற்றப்பட்டு, நவீன அமைப்புடன் கூடிய மின்சக்தியில் இயங்கும் மதகுகள் ரூ.1.6 கோடியில் அமைக்கப் பட்டுள்ளன.

இம்மதகுகள் வழி யாகதான் சென்னைக் கான 12 டிஎம்சி, நெல் லூர் மற்றும் சித்தூர் மாவட்டங்களில் பாசனத்துக்கான நீரும் அனுப்பப்படுகிறது. கண்டலேறுவில் 8.4 டிஎம்சியை விட அதிக மான நீர் இருக்கும் போது வினாடிக்கு 1000 முதல் 1600 கன அடி சென்னையின் குடி நீருக்காகவும், 100 அல்லது 200 கன அடி அளவுக்கு பாசனத்துக்காகவும் தண்ணீர் திறக்கப் படுகிறது. குடிநீர் மற்றும் பாசனத்துக்குத் தண்ணீர் திறப்பதுடன் தலா 3 மெகாவாட் வீதம் 9 மெகா வாட் மின்சாரமும் இங்கு கிடைக்கிறது. மதகுகள் வழியாக தயாரிக்கப்படும் மின்சாரம் அதே மதகை இயக்க பயன்படுத்தப்படுகிறது என்பது கூடுதல் தகவல்.

சாய் கங்கா கால்வாய்

கண்டலேறு முதன்மை கால்வாயில் இருந்து திறக்கப்படும் நீர், கால்வாய் வழியாக 2.6 கி.மீ., இயற்கையாகவே அமையப்பெற்ற சிறிய நீர்த்தேக்கத்துக்கு வருகிறது. அங்குதான் சென்னைக்கு கிருஷ்ணா நீரை தனியாக பிரித் தனுப்பும் சாய்கங்கா கால்வாய் அமைந்துள்ளது.

இங்குள்ள ஆறு மதகுகள் வழியாக அப்பகுதி யில் சாய்கங்கா கால்வாய் என்றழைக்கப்படும் கண்டலேறு -பூண்டி கால்வாயில் நீர் திறக்கப் படுகிறது. இங்கிருந்து தான் சென்னைக்கான பிரதான கால்வாயும் தொடங்குகிறது.

சாய்கங்கா கால்வாய், கண்டலேறு நீர்ப்போக்கி மற்றும் நீர்த்தேக்கப் பகுதிகளில் உள்ள 5 மதகுகளை இயக்குபவர்கள் சுழற்சி அடிப்படையில் பணியில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

போத்திரெட்டிபாடு முதன்மை நீர் போக்கி

ஸ்ரீசைலம் அணைக்கு அருகில் போத்தி ரெட்டிபாடு முதன்மை நீர் போக்கி அமைந் துள்ளது. சைலம் அணையில் 842 அடிக்கும் மேல் நீர் இருந்தால் மட்டுமே இந்த நீர் போக்கிக்கு தண்ணீர் கிடைக்கும்படி இது கட்டப்பட்டுள்ளது. இங்கிருந்துதான் தெலுங்கு கங்கைத் திட்டத்துக்கு நீர் திருப்பி விடப்படுகிறது. இந்த நீர் போக்கியில் வினாடிக்கு 10 ஆயிரத்து 500 கன அடி திறந்து விட முடியும். ஆனால், ஆந்திராவின் முன்னாள் முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி இந்த நீர்போக்கியின் திறனை அதிகரிக்க முயன்ற போது, தெலங்கானா பகுதிகளுக்கு கிடைக் கும் நீரின் அளவு குறைந்து விடும் என்று அப்பகுதி யினர் எதிர்த்தனர். அதே நேரம், வறட்சியான ராயலசீமா பகுதிகளுக்கு அதிக நீர் தேவைப் பட்டதால், நீர் போக்கியின் திறன் அதிகரிக்க வேண்டும் என்றும் குரல்கள் வலுத்தன.

பல கட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு வினாடிக்கு 44 ஆயிரம் கன அடி நீர் திறந்துவிடும் திறன் கொண்டதாக போத்திரெட்டிபாடு நீர் போக்கி மேம்படுத்தப்பட்டது. ஸ்ரீசலைம் அணை யில் 854 அடிக்கு மேல் நீர் இருந்தால்தான் போத்தி ரெட்டிபாடு நீர் போக்கி முழு திறனுடன் செயல்பட முடியும். இதையடுத்து, 16.34 கி.மீ தூரத்தில் பானக்செர்லா என்ற இடத்தில் மற்றொரு நீர் போக்கி அமைந்துள்ளது

முடுக்கிவிடப்பட்ட கிருஷ்ணா திட்டம்:நினைவுகூர்கிறார் மு.க.ஸ்டாலின்

- எஸ்.சசிதரன்

சென்னை மாநகர மேயராக மு.க.ஸ்டாலின் இருந்த போதுதான் கிருஷ்ணா நதிநீர் சென்னை வந்தது. இதை யொட்டி ‘தி இந்து’வில் வெளி யாகும் கிருஷ்ணா பயணக்கட்டு ரைக்காக அவரை சந்தித்து கருத்து கேட்டபோது, அவர் கூறியது:

எம்.ஜி.ஆரும், என்.டி.ஆரும் உருவாக்கிய “தெலுங்கு கங்கை” திட்டப்பணிகள், நான் சென்னை மேயராக இருந்த போது முடுக்கிவிடப்பட்டு, சென் னைக்கு முதன் முதலில் கிருஷ்ணா நீர் கொண்டு வரப் பட்டது. கண்டலேறு முதல் பூண்டி வரையுள்ள கால்வாய்கள் பலப் படுத்தப்பட்டு, நீர் தங்கு தடை யின்றி சென்னைக்கு வருவது உறுதி செய்யப்பட்டதும் திமுக ஆட்சியில்தான். அதற்காக ரூ.200 கோடி நிதியளித்து சத்ய சாய் பாபா பேருதவி தெய் தார். அவரை, 21.7.2007-ல் திமுக தலைவர் கருணாநிதி கவர வித்து விழா நடத்தினார். அவ்விழா வில் பேசிய அவர், “ஆன்மிக வாதியாக பாபாவும், அரசியல் வாதியாக நானும் ஒரே மேடை யில் பங்கேற்பது பலருக்கு ஆச்சரியமூட்டும்” என்றார். மக்கள் பணி என்றால் ஆன்மிகவாதிகளின் உதவியையும் பெறத் தயங் காதவர் அவர்.

இது மட்டுமின்றி சென்னை மற்றும் புறநகர் பகுதிகளின் குடிநீர்த் தேவையைப் போக்கு வதற்காக மீஞ்சூர், நெம்மேலி கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டங் களை நிறைவேற்றிக் கொடுத்த தும் திமுக ஆட்சிதான். குடிநீர் திட்டங்களை நிறை வேற்றுவதற்காக குடிநீர் வடிகால் வாரியம் என்ற தனி வாரியத்தை உருவாக்கியவர் கருணாநிதி. ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம், ராமநாதபுரம் மாவட்ட கூட்டுக் குடிநீர் திட்டம், நாகை கூட்டுக் குடிநீர் திட்டம் ஆகியவை திமுக ஆட்சியில் நிறைவேற்றப் பட்டவை.

இப்போது நிலுவையில் உள்ள வேலூர் கூட்டுக் குடிநீர் திட்டமும் திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டதுதான்.

தமிழகத்தில் உள்ள நதிகளை இணைக்கும் திட்டத்தை முதலில் அமல்படுத்தியதும் திமுகதான். அதேபோல் மாநிலத்துக்குள் நதிநீர் இணைப்புத் திட்டங்களை நிறைவேற்ற முடிவெடுத்து, இரு திட்டங்களை அறிவித்தவர் கருணாநிதி. ரூ.2180 கோடியில் காவிரி-குண்டாறு இணைப்புத் திட்டத்தில் ரூ.180 கோடி-க்கு மேல் முதல் கட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவிட்டன. அதேபோல், ரூ.369 கோடி மதிப்பீட்டில் தாமிரபரணி-கருமேனியாறு- நம்பியாறு இணைப்புத் திட்டமும் திமுக அறிவித்த திட்டம்தான்.

தெலுங்கு கங்கை தொடங்கும் வெளுகோடு நீர் தேக்கம்

-வி.சாரதா

வெள்ளோடு நீர்தேக்கம்

நந்தியால் அருகில் 11 கி.மீ. நீளத்தில் அமைந்துள்ளது வெளு கோடு சமநிலை (balancing reservoir) பராமரிப்பு நீர்த்தேக்கம். குடிநீர், பாசனம் ஆகியவற்றை முதன்மை நோக்கமாகக் கொள் ளாமல், அதிகபட்ச நீரினை குறிப்பிட்ட காலம் தேக்கி வைத்து உரிய பகுதிகளுக்கு அனுப்புவதற்காக கட்டப்படுவதே சமநிலை பராமரிப்பு நீர்த்தேக்கம் எனப்படும்.

இதில் அதிகபட்சமாக 16.95 டி.எம்.சி நீர் தேக்கி வைக்க முடியும். இது சென்னையில் உள்ள நான்கு முக்கிய நீர் தேக்கங்களின் ஒட்டுமொத்த கொள்ளளவை (11.05 டி.எம்.சி) விட அதிகமாகும். போத்திரெட்டிபாடு நீர்போக்கியிலிருந்து ஈர்ப்புவிசையால் ஓடிவரும் கிருஷ்ணா நீர் சேமிக்கப்படுகிறது. இங்கிருந்து சென்னைக்கு மட்டு மல்லாமல், கடப்பா, கர்னூல், மாவட்டங்களுக்கும் நீர் மொத்தமாக திறந்துவிடப்படுகிறது.

இங்கு தொடங்கும் கால்வாயே தெலுங்கு கங்கை கால்வாய் எனப்படுகிறது. இதன் குறைந்தபட்ச நீர் தேக்க அளவு (டெட் ஸ்டோரேஜ்) 0.046 டி.எம்.சி. அதற்கு கீழே நீர் இருப்பு இருந்தால், கால்வாய் மூலம் வெளியேற்ற முடியாது. இதற்கும் சோமசீலா அணைக்கும் இடையே, பத்வேல் என்ற இடத்தில் பொத்லூரூவீர பிரம்மேந்திர ஸ்வாமி நீர் தேக்கம் அமைந்துள்ளது.

பயணிப்போம்..

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x