Published : 21 Apr 2015 10:24 AM
Last Updated : 21 Apr 2015 10:24 AM

எல்லோருக்குமான தலைவர்

சமூக ஜனநாயகம் கிடைக்காமல் அரசியல் ஜனநாயகம் உயிர்ப்போடு இருக்காது என்பதைத் தனது வாழ்க்கையின் செய்தியாக வெளிப்படுத்திய டாக்டர் அம்பேத்கர், அதற்காகத் தன் இறுதி மூச்சு வரை போராடியிருக்கிறார்.

மகாத்மா காந்தியும் அம்பேத்கர் பற்றிக் கூறும்போது, ‘‘அவர் இடத்தில் நான் இருந்தால் அஹிம்சை மீது நம்பிக்கை உள்ளவனாக இருந்திருக்க மாட்டேன் என்றும், அவர் என்ன செய்தாலும் அதை நாம் பணிவுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும்’’ எனவும் கூறியிருக்கிறார்.

அப்படிப்பட்ட மாமனிதரைப் பற்றி, அவரது 125-வது பிறந்த நாளில் தலையங்கம் எழுதி, அவர் எல்லோருக்குமான தலைவர் எனச் சொல்லியிருப்பது, இந்தியர் அனைவரும் பெருமைப் பட வேண்டிய விஷயம்.

மோஹன்பாபு,சென்னை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x