Published : 27 Apr 2015 10:37 AM
Last Updated : 27 Apr 2015 10:37 AM

மார்க்ஸ் நூலகம்

மார்க்ஸ் நூலகக் கண்ணன் பற்றிய கட்டுரையில், இராஜகோபாலனின் அண்ணன் என்று குறிப்பிட்டிருப்பதைவிட, கண்ணனின் தம்பி இராஜகோபாலன் என்று அடையாளம் காட்டுவதே பொருத்தமாக இருக்கும்.

நூலகம் தவிர, பல்வேறு சமூகப் பணிகளில் ஈடுபட்டுள்ளார். பார்வையற்ற இளைஞர்கள் பட்டம் பெறவும், பட்டம் பெற்ற பின் வேலை கிடைக்கவும் அரும்பணியாற்றியுள்ளார்.

அவர்களுக்கான போராட்டப் பாதையை வகுத்துத் தந்தார். பணிக்காலத்தில் தம்மிடம் பணிபுரிந்த அதிகப் படிப்பில்லாத தொழிலாளர்களுக்குத் தமிழ்வழியாக மின்னியல் பாடம் நடத்துவார். அனுபவ அறிவோடு நூலறிவும் தேவை என்பதை வலியுறுத்துவார்.

அவரது நூலகத்தின் பெரும்பகுதியை மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி நூலகத்துக்கு நன்கொடையாக அளித்துள்ளர். எஞ்சியவைதான் இன்றைய மார்க்ஸ் நூலகம் பெற்றது.

- ச.சீ. இராஜகோபாலன்,சென்னை

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x