Published : 16 Mar 2015 10:46 AM
Last Updated : 16 Mar 2015 10:46 AM

ஆபத்தான வார்த்தைகள்

பெரும்பான்மை பலம் பெற்று மத்தியில் பாஜக அரசு அமைத்தது முதல் ஒவ்வொரு நாளும் சர்ச்சைக்குரிய கருத்துகளை பாஜக, ஆர்எஸ்எஸ், விசுவ இந்து பரிஷத் தலைவர்கள் வெளியிட்டுவருகிறார்கள்.

சமீபத்தில், ‘இந்தியாவில் மரபணுரீதியாக, கலாச்சாரரீதியாக சிறுபான்மையினர் என்று எவரும் இல்லை. இந்தியாவில் பிறந்த அனைவரும் இந்துக்களே. இதை அவர்கள் ஏற்றுக்கொண்டாலும், கொள்ளாவிட்டாலும் இதுவே மறுக்க முடியாத உண்மை’ என்று பேசியிருக்கிறார் ஆர்எஸ்எஸ் துணைப் பொதுச் செயலாளர் தத்தாத்ரேய ஹோஸ்போலே.

இந்தியாவை மதச்சார்பற்ற நாடாகக் கூறுவதையே ஏற்றுக்கொள்ளாத வலதுசாரி அமைப்புகள் வேறு எந்த மாதிரியான நிலைப்பாட்டை எடுப்பார்கள்?

பிரதமர் நரேந்திர மோடி இந்த விஷயத்தில் உறுதியான நிலைப்பாட்டை எடுக்காவிட்டால், அது பெரும் ஆபத்தை ஏற்படுத்திவிடும்.

- தஞ்சை பிரவீண்,மின்னஞ்சல் வழியாக…

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x