Published : 19 Mar 2015 10:51 AM
Last Updated : 19 Mar 2015 10:51 AM

காட்டுலக பிரம்மா

இந்தக் கோடைக் காலத்தில்தான் நமக்கு மரத்தின் நிழலும் அதன் அருமையும் தெரிகிறது. இருந்தாலும், மரத்தை வெட்டுவது, காடுகளை அழிப்பது போன்ற சோகக் கதைகள் தொடர்ந்துகொண்டேதான் இருக்கின்றன.

அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஜாதவ் பயேங் என்ற தனி மனிதர் 35 ஆண்டுகளாக 1,360 ஏக்கர் வெறும் மணல் திட்டை வளமான காடாக மாற்றியிருக்கிறார் என்ற செய்தி என்னை ஆச்சரியப்படுத்தியது.

ஒரு மனிதன் சிலபல மரங்களை வளர்க்க முடியும், ஆனால், ஒரு காட்டையே உருவாக்கிக் காட்டியிருக்கிறார் ஜாதவ் பயேங்! பள்ளி மாணவர்களுக்கு மரம் நடுவதற்குப் பாடம் எடுப்பதோடு, பயிற்சியும் அளிக்க வேண்டும்.

இந்த முயற்சி இன்னும் பல ஜாதவ்களை உருவாக்க வழி செய்யும்.

- சுல்தான், கோயம்புத்தூர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x