Published : 05 Mar 2015 10:52 AM
Last Updated : 05 Mar 2015 10:52 AM

தொழிலாளர்களின் பரிதாப நிலை

வட மாநிலத் தொழிலாளர்கள் தமிழகத்தில் படும் துயரங்களைப் பதிவுசெய்த ‘வட இந்தியத் தொழிலாளர்களின் நரகம்’ மிக முக்கியமான கட்டுரை.

தொழிலாளர்களின் அறியாமையைத் தொழிற்சாலை உரிமையாளர்கள் தவறாகப் பயன்படுத்திக்கொள்கிறார்கள் என்பது இந்தக் கட்டுரையின் மூலம் தெரிகிறது. தொழிலாளர் நலன் காக்க தொழிற்சட்டங்கள் உள்ளன. ஆனால், அவையெல்லாம் வெறும் பெயரளவிலேயே இருப்பதாகவே தோன்றுகிறது.

உடலுழைப்பில் ஈடுபடும் தொழிலாளர்களை அரசும் சமூகமும் மதிப்பதேயில்லை. துப்புரவுத் தொழிலாளர்களுக்கு உரிய கையுறை, முகக்கவசம் போன்ற அத்தியாவசியமான உபகரணங்களைக்கூட கொடுக்காமல் அவர்களை நாம் வேலை வாங்கிக்கொண்டிருக்கிறோம். ஒருபக்கம் தொழிலாளர்களை இழிநிலையில் வைத்துவிட்டு, நாம் நாகரிகச் சமூகம் என்று சொல்லிக்கொள்வது நம்மையே நாம் ஏமாற்றிக்கொள்வதுதானே அன்றி வேறல்ல.

- ப. சுகுமார்,தூத்துக்குடி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x