Published : 18 Feb 2015 11:03 AM
Last Updated : 18 Feb 2015 11:03 AM

மக்களை மறந்த தலைவர்கள்

இயக்குநர் தங்கர் பச்சான் எழுதும் ‘சொல்லத் தோணுது’ தொடரில் வெளியான ‘தலைவர்கள் பஞ்சமும், தடுமாறும் மக்களும்’ பல உண்மைகளைப் பதிவுசெய்திருக்கிறது. தற்போது ஏறத்தாழ எல்லா கட்சியினருக்கும் சொந்தமாக தொலைக்காட்சி சேனல்கள் இருக்கின்றன. அவற்றைப் பயன்படுத்தி அரசியல் கட்சிகள் பரஸ்பரம் குற்றச்சாட்டுகளையும், விமர்சனங்களையும் பதிவுசெய்கின்றன.

தங்கர் பச்சான் கூறியதுபோல நன்மை செய்யும் தலைவர்கள் தமிழகத்தில் குறைந்துவருகிறார்களோ என்றே எண்ண வேண்டியிருக்கிறது. காரணம், பெரும்பாலான தலைவர்கள் தங்கள் சொந்த வளர்ச்சியிலும் கட்சியைப் பலப்படுத்துவதிலும் கவனம் செலுத்துகிறார்களே தவிர, மக்களைப் பற்றிய அக்கறையுடன் செயல்படுவதாகத் தெரியவில்லை.

- எம். ஆர். லட்சுமிநாராயணன்,கள்ளக்குறிச்சி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x