Published : 18 Feb 2015 10:58 AM
Last Updated : 18 Feb 2015 10:58 AM

இன மேட்டிமையின் விளைவுகள்

அமெரிக்காவில் இந்தியர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக எழுதப்பட்ட ‘இனமேட்டிமை மனோபாவம் நடத்தும் தாக்குதல்’ தலையங்கத்தின் கருத்து மிகச் சரியானது. இதை ஏதோ ஒரு காவல் துறை அதிகாரியின் தவறான நடத்தையாக ஒதுக்கிவிட முடியாது.

பலர் மனதிலிருந்து இனவெறி இன்னும் அகலவில்லை என்பதைத்தான் இதுபோன்ற சம்பவங்கள் உணர்த்துகின்றன. பயங்கரவாதத் தாக்குதல்கள், துப்பாக்கிச் சூடு போன்ற சம்பவங்களால், அமெரிக்கக் காவல் துறை விழிப்புடன் இருப்பதாகக் கூறப்படுகிறது.

அதற்காக ஒருவரது பின்னணி பற்றி சரியாகத் தெரியாமலேயே அவரைத் தாக்கும் அளவுக்குச் செல்வதற்கு என்ன அவசியம் என்ற கேள்வியும் எழுகிறது.

- சந்தானகிருஷ்ணன்,தஞ்சாவூர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x