Published : 25 Feb 2015 10:50 AM
Last Updated : 25 Feb 2015 10:50 AM

பொருளாதார இடைவெளி வந்து நீண்ட நாட்கள் ஆனது

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மாநிலங்களில் தொடங்க ஆரம்பித்து நீண்ட நாட்களாகின்றன.

ஆனால், இந்தியாவின் அனைத்து மாநிலங்களின் பொருளாதார வளர்ச்சியிலும் ஒரே மாதிரியான (அரசியல் கலப்பு இல்லாமல்) அணுகுமுறையைப் பின்பற்றும் மத்திய அரசைச் சமீபகாலமாகப் பார்க்க முடியவில்லை.

நிலங்களை அவற்றின் பொருளாதார பலங்களையும், வளர்ச்சிப் பின்னணியையும் மையமாக வைத்து திட்ட உதவிகளைச் செய்ய வேண்டியது மத்திய அரசின் கடமையாகும். பொருளாதார வளர்ச்சியில் மாநிலங்களிடையே தொடரும் ஏற்றத்தாழ்வு என்பது மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கைகளுக்கு நிகழும் தோல்வியாகவே கருத வேண்டியுள்ளது.

மொத்த வரி வருவாயில் மாநில அரசுக்குப் பகிர்ந்தளிக்கப்படும் தற்போதைய அளவான 32 சதவீதத்தை 42 சதவீதமாக உயர்த்தலாம் என்ற 14-வது நிதிக்குழு பரிந்துரையை நிதிஅமைச்சர் எதிர் வரும் பட்ஜெட்டில் செயல்படுத்தினால், மாநிலங்களின் நிதி அடிப்படைகள் வலுப்பெறுவதுடன், மாநிலங்களிடையேயான பொருளாதார இடைவெளி குறைய வாய்ப்புகள் ஏற்படும்.

- முனைவர் சீ. ஜானகிராமன்,கும்பகோணம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x