Published : 20 Jun 2015 10:39 AM
Last Updated : 20 Jun 2015 10:39 AM

கருணை அடிப்படையிலான உதவி?

மத்திய அமைச்சர்கள் லலித் மோடிக்குக் கருணை அடிப்படையிலான உதவி செய்ததாக விளக்கம் தருகிறார்கள். இவர்களின் வாதம் நம்பும்படியாக இல்லை.

அப்படியே ஒரு வாதத்துக்கு வைத்துக்கொண்டாலும், அனைத்து அமைச்சகங்களிலும் இதுபோல சாதாரண மக்களுக்குக் கருணை அடிப்படையில் என்னென்ன உதவிகள் செய்யப்பட்டன என்று இவர்களால் சொல்ல முடியுமா?

சாதாரண ஏழை எளிய மக்களுக்கு இந்தக் கருணை அடிப்படையிலான உதவி ஏன் கிடைப்பதில்லை? கருணை அடிப்படையிலான உதவிகள் கிடைப்பதற்கு அடிப்படைத் தகுதிகள் என்னென்ன?

- பி.கே.மின்னஞ்சல் வழியாக…

***

வேதனையே!

ஒட்டுமொத்த இந்தியர்களைக் கட்டிப்போட்ட இந்தியன் பிரீமியர் கிரிக்கெட் போட்டிகளில் ஊழல் செய்து, வெளிநாட்டில் தஞ்சமடைந்திருக்கும் மோடிக்கு, தனது அமைச்சரவையின் வெளியுறவுத் துறை அமைச்சர் உதவியிருப்பது அம்பலமாகிவிட்டதை, மூத்த தலைவர்கள் பூசிமறைப்பது வேதனையே!

- கி. ரெங்கராஜன்,திருநெல்வேலி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x