Published : 22 Jun 2016 11:18 AM
Last Updated : 22 Jun 2016 11:18 AM

தொடரட்டும் சேவை

திருச்சி மாவட்டம், கல்லக்காம்பட்டி கிராமத்தில் வறிய குடும்பத்தில் பிறந்த பாண்டிச்செல்வம் அரசுப் பள்ளியில் படித்து மாவட்ட அளவில் 3-ம் இடம் பிடித்ததைச் செய்தியாக வெளியிட்டு, அவரது மேற்படிப்புக்கு உதவிய ‘தி இந்து’ நாளிதழுக்குப் பாராட்டுகள்.

அந்த மாணவருக்கு விடுதியில் தங்கிப் பயில வாய்ப்பு தந்த திருப்பூர் முத்தூர் விவேகானந்தா வித்யாலயா பள்ளிக்கும், பொருளுதவி அளித்த மாவட்ட நலக் குழு, பிஎஸ்என்எல் அதிகாரிகள் சங்கம், தேசிய தொலைத் தொடர்பு ஊழியர்கள் சங்கம் ஆகியவற்றுக்கும் நன்றி. செய்திகளுக்கு மட்டும் முன்னுரிமை அளிக்காமல், பொதுச்சேவை புரிவதிலும் அக்கறை காட்டுவது மிகுந்த பாராட்டுக்குரியது.

- நன்னிலம் இளங்கோவன், மயிலாடுதுறை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x