Published : 07 Jul 2016 01:01 PM
Last Updated : 07 Jul 2016 01:01 PM

கல்வி நகரம் நெல்லை

'அல்வா நகரத்தின் மீது அரிவாள் முத்திரை' என்ற தலைப்பிலான செய்தி படித்தேன். ராம்குமார் போன்ற ஒரு சிலர் செய்த தவறுகளால் நெல்லை மாவட்டத்தை முழுமையாகக் குறை சொல்ல முடியாது.

ஒருங்கிணைந்த திருநெல்வேலி (தற்போதைய திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி) மாவட்டத்தில்தான் வ.உ.சி., பாரதி, கட்டபொம்மன், பூலித்தேவன், வாஞ்சிநாதன் போன்ற சுதந்திரப் போராட்ட வீரர்கள் பிறந்தார் கள். இப்போது அங்கே அரிவாள் கலாச்சாரம் குறைந்து, படிப்பவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்துவருகிறது.

சென்னை, கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல், சேலம், வேலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் போன்ற மாவட்டங்களைப் போல பல புதிய தொழில்கள் அம்மாவட்டத்தில் உருவானால், வேலைவாய்ப்புகள் பெருகும். அதோடு வன்முறைக்கும் இடமிருக்காது.

- எம்.ஆர்.லட்சுமிநாராயணன், இராசிபுரம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x