Published : 20 Jun 2015 10:40 AM
Last Updated : 20 Jun 2015 10:40 AM

முழு ஒத்துழைப்பு தருகிறோம்

பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் வெப்ப உயர்வு நிச்சயமாக புவியை அழிவுப் பாதைக்கு அழைத்துச் செல்லும்.

இந்தத் தீவிரத்தை உணர்ந்து அதைத் தடுக்கும் வண்ணம் விழிப்புணர்வுப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் ‘தி கார்டியன்’ பத்திரிகையின் தலைமை ஆசிரியர் ஆலன் ரூஸ்பிரிட்ஜர் பாராட்டுதலுக்குரியவர்.

ஒரு கை ஓசை எழுப்பாது. அவர் குறிப்பிட்டது போல சமூக அக்கறையுள்ள ‘தி இந்து’ நாளிதழும் பருவ நிலை மாற்றத்தால் ஏற்படும் விளைவுகளைப் பற்றிய விழிப்புணர்வை இன்னும் தீவிரமாகச் செயல்படுத்த முன்வர வேண்டும். வாசகர்களாகிய நாங்கள் முழு ஒத்துழைப்பையும் தரத் தயாராக இருக்கிறோம்.

- கேப்டன் யாசீன்,திண்டுக்கல்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x