Published : 11 Jun 2016 11:57 AM
Last Updated : 11 Jun 2016 11:57 AM

பலவீனமே அதிகம்

ஜனநாயகம் பற்றி ஒருபுறம் பெருமையாகச் சொல்லிக்கொள்ளலாம் என்றாலும், மறுபுறம் ஜனநாயகம் என்னும் பெயரில் ஏராளமான குழப்பங்களும் உண்டு. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவரே முதல்வர் ஆக வேண்டும். வேறொருவர் முதல்வராவது ஜனநாயகத்தில் உள்ள குழப்பம் மட்டுமல்ல, மக்களுக்குச் செய்யும் துரோகம் ஆகும். ஒரு மாநிலத்தைச் சேர்ந்தவர், சம்பந்தமில்லாத வேறொரு மாநிலத்தில் ராஜ்ய சபா உறுப்பினராகத் தேரந்தெடுக்கப்படுவதும் நியாயமாகப் படவில்லை.

தங்க. ஜெயராமன் எழுதிய ‘ஜனநாயகத்தில் யார் இன்றியமையாதவர்கள்?’ என்னும் கட்டுரை, இதுபோலப் பல கேள்விகளை எழுப்புகிறது. ஜனநாயகத்தில் பலத்தைவிட பலவீனங்களே அதிகம். பலவீனங்களைத் தங்களுக்குப் பலமாக்கிக்கொள்கின்றனர் அரசியல்வாதிகள்.

பொன்.குமார், சேலம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x