Published : 05 Jul 2016 10:45 AM
Last Updated : 05 Jul 2016 10:45 AM

கூடுதல் தண்டனை

ஐஸ்வர்யா என்ற பெண் குடிபோதையில் காரை ஓட்டி, அப்பாவி கூலித் தொழிலாளி ஒருவரின் இறப்புக்குக் காரணமாகியிருக்கிறார்.

'குடித்துவிட்டு கார் ஓட்டுபவர்கள் மனித வெடிகுண்டுக்குச் சமம்' என்று உச்ச நீதிமன்றமே கருத்துச் சொல்லியுள்ள நிலையில், அவர்களுக்குப் போதிய தண்டனைகள் இல்லாதது துரதிர்ஷ்டம்.

குடித்து விட்டு வாகனம் ஓட்டுபவர்களுக்கான தண்டனை 6 மாத சிறை, 10 லட்சம் அபராதம். அதைச் செலுத்தத் தவறினால் 5 ஆண்டுகள் சிறை என சட்டம் இயற்ற வேண்டும்.

அதே நபர்கள் குடிபோதையில், ஆட்கள் மீது மோதிச் சாகடித்துவிட்டால் 50 லட்சம் அபராதம், பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு மற்றும் சிறைத் தண்டனை என்று இன்னும் கடுமையான தண்டனை தேவை. அப்போதுதான் வாகன ஓட்டிகளுக்கு மனித உயிர் மேல் பயமும், மரியாதையும் இருக்கும்!

- இரா.முத்துக்குமரன், குருங்குளம் மேல்பாதி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x