Published : 01 Aug 2016 01:05 PM
Last Updated : 01 Aug 2016 01:05 PM

சிறுபான்மை அரசியல்

சரியான தருணத்தில் சரியான கருத்தைப் பதிவுசெய்திருக்கிறார், 'பொது அடையாளத்தை இழக்கலாமா முஸ்லிம்கள்? கட்டுரையில் புதுமடம் ஜாபர் அலி.

முஸ்லிம்களின் தியாகங்களும், நாட்டின் வளர்ச்சிக்கு அவர்கள் அளித்த பங்களிப்பும் அடையாளம் காணாமல் போனது, தங்களை முஸ்லிம்கள் என்று அடையாளப்படுத்தி அரசியல் செய்வதால்தான்.

சிறுபான்மை அரசியல், முஸ்லிம்களைப் பின்னடையச் செய்யுமே தவிர, அவர்களுக்கு எவ்வித முன்னேற்றத்தையும் தராது.

- ஷா புர்ஹான், மின்னஞ்சல் வழியாக.

*

'பொது அடையாளத்தை இழக்கலாமா முஸ்லிம்கள்?' என்கிற கட்டுரை இனி முஸ்லிம்கள் சந்தர்ப்பவாதத் தலைவர்களிடமிருந்து விலகி, பொது நீரோட்ட அரசியலுக்கு வரவேண்டியதன் கட்டாயத்தை அருமையாக உணர்த்தியுள்ளது.

- எச்.பாத்திமா, திருவிதாங்கோடு.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x