Published : 15 Feb 2017 10:12 AM
Last Updated : 15 Feb 2017 10:12 AM

இப்படிக்கு இவர்கள்: நீதி வென்றது

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் படி 4 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப் பெற்ற குற்றவாளிகளான சசிகலா உள்ளிட்ட மூவரும், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் பிரிவு 8(3)ன் படி அடுத்த 10 (4+6) வருடத்திற்கு தேர்தலில் போட்டியிட முடியாது. இது பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு ஒரு சிறந்த பாடம். அரசியல்வாதிகளை தனிப்பட்ட நபர்களாகக் கருதாமல், சமூகத்தை வழிநடத்துபவர்கள் என்ற நோக்கத்தில் நீதிமன்றம் அணுகுவதுடன், இதுபோன்ற வழக்குகளில் விரைவாகத் தீர்ப்பு வழங்க வேண்டும்.

- லேனா இளையபெருமாள், நெல்லை.



பிம்பச் சிறை

நாம் தெய்வம் போல கொண்டாடிய பிம்பம் உடைகிறபோது, கொஞ்சம் சங்கடமாகத்தான் இருக்கிறது. இந்த பிம்பம் அவர்கள் மட்டும் உருவாக்கியதில்லை. பிற அரசியல் கட்சித் தலைவர்கள், மக்கள், ஊடகங்கள் எல்லாவற்றுக்கும் பங்கிருக்கிறது. இனிமேலாவது பிம்பச் சிறையில் மாட்டிக்கொள்ளாமல் தலைவர்கள் இயங்க வேண்டும்.

- கதிரேசன், திண்டுக்கல்.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x