Published : 05 Aug 2016 03:50 PM
Last Updated : 05 Aug 2016 03:50 PM

கூட்டணி வலை?

திமுக தலைவர் கருணாநிதி "பொதுவுடைமைவாதிகள் ஒரு சிலரின் சுயநலம் காரணமாக, தமிழக சட்டமன்றத்தில் எத்தனையோ ஆண்டுகாலமாக ஒலித்துவந்த கம்யூனிசக் கொள்கைகளின் வாய் மூடப்பட்டுவிட்டது" என்று வருத்தப்படுகிறார்.

கம்யூனிஸ்ட் கட்சிகளின் இந்நிலைக்குக் காரணம், சட்டமன்றத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி வைக்காததே என்பதை மறைமுகமாகச் சுட்டிக் காட்டுவதாகவே தோன்றுகிறது. மேலும், வரப்போகிற உள்ளாட்சித் தேர்தலில் தங்களுடன் சேர்ந்தாலொழிய கம்யூனிஸ்ட்டுகள் கடைத்தேற வேறு வழி இல்லை என்று சொல்கிறார் போலும்.

- வளர்மதி ஆசைத்தம்பி, விளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x