Published : 02 Aug 2016 05:40 PM
Last Updated : 02 Aug 2016 05:40 PM

தற்கொலைக்குச் சமம்

நம் நாட்டின் தென்கோடியில் பல துறைமுகங்கள் உருவாகியும் உருவாகிக்கொண்டும் இருக்கின்றன. இவை நாட்டை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்லும் என்று கருதப்படுகிறது. இங்கிலாந்தின் தென் பகுதியில் பிளைமவுத் என்ற இடத்தில் துறைமுகம் விரிவாக்கப்பட்டதன் விளைவு, அந்தப் பகுதிக்கே உரிய மீன் மற்றும் கடல் பிராணிகள் அழிவு நிலைக்குத் தள்ளப்பட்டன என்று ஆய்வுகள் எடுத்துக்காட்டியுள்ளன.

துறைமுகம் சார்ந்த நிலப்பரப்பும் நச்சடைந்தது. இவற்றையெல்லாம் அறியாமலோ அல்லது அறிந்தும் கவலைப்படாமலோ புதிய துறைமுகங்களை நிறுவுவது தற்கொலைக்குச் சமம்! சிலருக்குக் கொண்டாட்டம், மக்களுக்கும் கடல்வாழ் உயிரினங்களுக்கும் திண்டாட்டம்.

- ச.சீ.இராஜகோபாலன், சென்னை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x