Published : 11 Jan 2019 09:15 AM
Last Updated : 11 Jan 2019 09:15 AM

மக்கள் விஞ்ஞானிகள் கண்டறிந்த புதிய கிரகம்: நீர் இருக்கும் என்று தகவல்!

நாஸாவின் கெப்ளர் விண்வெளித் தொலைநோக்கியின் தரவுகளைக் கொண்டு, பூமியைப் போல் கிட்டத்தட்ட இரண்டு மடங்கு பெரிதான கிரகத்தை தொழில்முறை அல்லாத விஞ்ஞானிகள் கண்டறிந்திருக்கிறார்கள். கே2-288பிபி என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த கிரகம் பூமியிலிருந்து 226 ஒளி ஆண்டுகள் தொலைவில் இருப்பதாகத் தெரியவருகிறது. கே2-288பி எனும் நட்சத்திரத்தின், உயிரினங்கள் வாழத் தகுந்த பகுதியில் (ஒரு நட்சத்திரத்தைச் சுற்றி உயிரினங்கள் வாழத்தகுந்த கிரகங்கள் காணப்படலாம் என்று கருதப்படும் விண்வெளிப் பகுதி) இது அமைந்திருக்கிறது. இந்தக் கிரகத்தில் திரவ வடிவத்தில் நீர் இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்தத் தகவலை நாஸா வெளியிட்டிருக்கிறது!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x